இளைய ஆதீனப் பதவியில் இருந்த நித்யானந்தா நீக்கம்: அரசுக்கு அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை!
சென்னை: மதுரை இளைய ஆதீனப் பதவியில் இருந்து நித்யானந்தா நீக்கப்பட்டது தொடர்பாக அரசு இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வரவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை ஆதீனகர்த்தராக இருப்பவர் அருணகிரிநாதர். இவருக்கு இளைய ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்து கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களான ஜெகதலபிரதாபன், கிருஷ்ணமூர்த்தி, கவுதம் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை நீதிபதிகள் பானுமதி, சுப்பையா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. கடந்த 19ம் தேதியுடன் இருத்தரப்பு வாதங்களும் முடிந்து, தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் மதுரை இளைய ஆதீனம் பொறுப்பில் இருந்து நித்யானந்தா நீக்கப்பட்டதாக, மதுரை ஆதீனம் அறிவித்தது. எனவே இது குறித்த சில தெளிவுகளை பெறுவதற்காக இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
இந்துசமய அறநிலையத்துறை தரப்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், அரசு தரப்பில் சிறப்பு அரசு பிளீடர் ஐ.எஸ்.இன்பதுரை, ஜெகதலபிரதாபன் தரப்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.சந்திரன் ஆஜரானார்கள்.
அப்போது மதுரை ஆதீனம் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபால், இளைய ஆதீனத்தில் இருந்து நித்யானந்தா நீக்கப்பட்டுள்ளார். அதை அருணகிரிநாதர் தபால் மூலம் அனுப்பி இருப்பதாகவும், ஓரிரு நாட்களில் அது கிடைத்த பிறகு விரிவாக வாதிட முடியும் என்றும் தெரிவித்தார்.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.சந்திரன், இந்த நீக்கம் குறித்து பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. அரசுக்கு தகவல் வந்துள்ளதா என்று கேட்டார்.
உடனே அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், மதுரை ஆதீனத்தில் இருந்து நித்தியானந்தா நீக்கப்பட்டது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்துசமய அறநிலையத்துறைக்கும் அரசுக்கும் வந்து சேரவில்லை என்று கூறினார். இதையடுத்து இது குறித்த விசாரணை இன்றைக்கு தள்ளி வைக்கப்பட்டது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications