கல்பாக்கம் அணுமின்நிலையம் பாதுகாப்பாக உள்ளது: இயக்குநர் ராமமூர்த்தி
கல்பாக்கம் : நிலம் புயல் காரணமாக கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது
இது தொடர்பாக கல்பாக்கம் அணுமின் நிலைய இயக்குனர் ராமமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசினாலும், அதனை எதிர்கொள்ளும் வகையில் அணுமின் நிலையத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். நிலைமையை கண்காணிக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ராமமூர்த்தி கூறியுள்ளார்.
நிலம் புயல் சென்னைக்கு தென்கிழக்கே கரையை கடக்கும் என்று கூறப்படுவதை அடுத்து கடலோரம் அமைந்துள்ள கல்பாக்கம் அணுமின்நிலையத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் உருவானது. பொதுமக்களின் அச்சத்தைப் போக்கவே அணுமின்நிலைய நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications