எம்.எல்.ஏ கைது குறித்துப் பேச அனுமதி மறுப்பு... தேமுதிக வெளிநடப்பு
சென்னை: சென்னை விமான நிலையத்தில் செய்தியாளரைத் தாக்கிய வழக்கில் தேமுதிக எம்.எல்.ஏ அனகை முருகேசன் கைது செய்யப்பட்டது குறித்து பிரச்சினை எழுப்ப முயன்ற தேமுதிக உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதைக் கண்டித்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சமீபத்தில் சென்னை விமான நிலையத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வந்தபோது அவரிடம் கேள்வி கேட்க முயன்ற செய்தியாளர் பாலுவை தரக்குறைவாக பேசினார். நாயே என்றும் திட்டினார். அப்போது செங்கல்பட்டு தொகுதி தேமுதிக உறுப்பினர் அனகை முருகேசன் என்பவர் செய்தியாளர் பாலுவைப் பிடித்துக் கீழே தள்ளி விட்டார்.
இதுதொடர்பாக போலீஸார் விஜயகாந்த், முருகேசன் ஆகியோர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் அனகை முருகேசன் கைது செய்யப்பட்டுள்ளார். விஜயகாந்த்தும் கைது செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில், இன்று சட்டசபையில் முருகேசன் கைது விவகாரத்தை எழுப்பி பேச முயன்றனர் தேமுதிக எம்.எல்.ஏக்கள். ஆனால் அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதையடுத்து தேமுதிக எம்.எல்.ஏக்கள் அனைவரும் வெளிநடப்புச் செய்து வெளியேறினர்.












Click it and Unblock the Notifications