நவ. 2ம் தேதி சென்னையில் ஆர்.எஸ்.எஸ். தேசிய செயற்குழு கூட்டம்!
சென்னை: ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேசிய செயற்குழு கூட்டம் சென்னையில் நவம்பர் 2 ம் தேதி முதல் 4 ம் தேதி வரை நடைபெற உள்ளது.
சென்னையில், ஆர்எஸ்எஸ் அகில இந்திய பிரச்சார அணி செயலாளர் மோகன் வைத்யா, தென்னிந்திய செயலாளர் ராஜேந்திரன், மாநில அணி செயலாளர் சடகோபன் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது
ஆர்எஸ்எஸ் அமைப் பின் தேசிய செயற்குழு கூட்டம் சென்னையில் முதன் முறையாக நடைபெற உள்ளது. இந்த மாதம் 2, 3, 4 தேதிகளில் சென்னை கேளம்பாக்கம், சிவசங்கர் பாபா ஆஸ்ரமத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
இதில், ஆர்எஸ்எஸ் அகில இந்திய தலைவர் மோகன் பகவத், பொது செயலாளர் சுரேஷ் ஜோஷி, விஷ்வ இந்து பரிஷத் அகில உலக தலைவர் அசோக் சிங்கால், செயலாளர் பிரவீன் தொகாடியா, பாஜக அகில இந்திய அமைப்பு செயலாளர் ராம்லால் உள்பட நாடு முழுவதும் உள்ள நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்புடையவர் களும் இதில் கலந்து கொள்கின்றனர் என்றனர்.












Click it and Unblock the Notifications