திருப்பரங்குன்றம் மலை உச்சியில் வெடிகுண்டுகளால் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் மலையின் மேல் சக்தி வாய்ந்த வெடி குண்டுகள் செய்யப் பயன்படும் மூலப் பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலை மேல் வெடி குண்டுகள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மலை மீது சென்ற போலீசார் அங்கே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு பிளாஸ்டிக் வாளியை கைப்பற்றினர்,

அதில் நிப்போ 9 வோல்ட் பேட்டரிகள்- 16, சிறிய ரக பென்டார்ச் பேட்டரிகள் 6, சுவிட்ச் 8, டைமர் 4, அலுமினியப் பவுடர் 1 கிலோ, வயர் 2 ரோல், பிவிசி பைப் 3, அதற்கான பைப் மூடிகள் 6, பெட்ரோல் 600 மிலி, சணல் பந்து 2, வெடி பொருள் சுற்றப்பட்ட நிலையில் சணல் பந்து 2, செல் போன்கள் 2 ஆகியவை இருந்தன.

திருப்பரங்குன்றத்தில் வருகின்ற நவம்பர் 27ந் தேதி கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, இங்கே மலை மேல் தீபம் ஏற்றி வந்த விழா, மதப் பிரச்னைகளைக் காரணம் காட்டி பெரும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் இந்து இயக்கங்கள் மலை மேல் தீபம் ஏற்றும் தங்கள் உரிமையை வெளிப்படுத்த முயற்சிப்பதால் பதற்றம் உருவாகும். இந்நிலையில் கார்த்திகை நேரத்தில் இதுபோன்ற வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+