கட்சி வேஷ்டியைக் கழற்றி எறிந்தார் சுந்தரராஜன்... பேண்ட் போடுகிறார்!

விஜயகாந்த்தின் நீண்ட கால நண்பரும், மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏவுமான சுந்தரராஜன், சமீபத்தில் திட்டக்குடி எம்.எல்.ஏ. தமிழழகனுடன் சேர்ந்து முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து அதிமுக அரசுக்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் கட்சியினரின் கடும் கோபத்துக்கும் ஆளானார்.
ஜெயலலிதாவை சந்தித்தபோதும் சரி, பி்ன்னர் சட்டசபைக்கு கடந்த 3 நாட்களாக வந்தபோதும் சரி தேமுதிக கரை வேஷ்டியைத்தான் அவர் அணிந்திருந்தார். ஆனால் நேற்று திடீர் மாற்றமாக கருப்பு பேண்டுக்கு மாறி விட்டார். கருப்பு பேண்ட், வெள்ளை சட்டையில் வித்தியாசமான கெட்டப்பில் சட்டசபைக்கு வந்த அவர் இனிமேல் பேண்ட் மட்டுமே அணியப் போவதாகவும், கரை வேஷ்டியைக் கட்டப் போவதில்லை என்றும் கூறியுள்ளாராம் சுந்தரராஜன்.
வீட்டைக் காலி செய்யும்போது பொருட்களை ஒப்படைக்க வேண்டும் என்று தேமுதிக கொறடா வி.சி.சந்திரகுமார் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் முதலில் கரை வேட்டியைக் காலி செய்துள்ளார் சுந்தரராஜன், அடுத்து எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்வாரா இல்லையா என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications