ஜெனிவா ஐ.நா. மாநாடு: இலங்கையை கேள்விக் கணைகளாள் துளைத்த இந்தியா, அமெரிக்கா, கனடா!
ஜெனிவா:ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி ஆகிய நாடுகள் கேள்விக் கணைகளை ஏவின.
இந்தியத் தரப்பில் முன்வைக்கப்பட்ட கருத்து:
இலங்கை வடக்கு மாகாணத்தில் விரைந்து தேர்தல் நடத்தவேண்டும். போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி நம்ப தகுந்த விசாரணை நடத்தப்பட வேண்டும். இறுதிப் போரில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டது பற்றியும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழர் பிரச்சனைக்கு விரைவான அரசியல் தீர்வு அவசியம்.
தமிழர் பகுதிகளில் தனியார் நிலத்தை ராணுவம் திரும்ப ஒப்படைக்கவும் ராணுவ உயர் பாதுகாப்பு வளையங்களின் எண்ணிக்கையை குறைக்கவும் இந்தியத் தரப்பு வலியுறுத்தியது..
இந்திய- இலங்கை ஒப்பந்தம் மூலமாக இலங்கையின் அரசியல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 13-வது அரசியல் திருத்தத்தை நடைமுறைப்படுத்தி தமிழருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்,
பொதுமக்களின் மீள்குடியேற்றம், முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு ஆகியவை குறித்து கவலை தெரிவித்த இந்தியா, அடுத்த ஆண்டிலாவது தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
அமெரிக்காவின் கருத்து:
இலங்கையில் தற்போது தலைமை நீதிபதியை நீக்குவதற்கான நடவடிக்கையை அந்நாட்டு அரசு மேற்கொண்டிருப்பது நீதித்துறையில் அரசின் தலையீடாகும். இலங்கையில் மீள்குடியேற்றம் மற்றும் புனரமைப்புப் பணிகள் பெரும் கவலை ஏற்படுத்துகிறது. இலங்கை அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
தமிழர் பகுதிகளில் ராணுவத்தைக் குறைத்தல், தேசிய இனப் பிரச்சனைக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தல், அங்கீகரிக்கப்படாத ராணுவக் குழுக்களின் ஆயுதங்களைப் பறிமுதல் செய்தல் மற்றும் கருத்து சுதந்திரத்தை உறுதி செய்யவும் அமெரிக்கா வலியுறுத்தியது.
கனடாவின் கருத்து:
இலங்கையின் வடக்குப் பகுதியில் உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். மனித உரிமைகளைக் காக்க உரிய நடவடிக்கைகள் அவசியம்.,
ஜெர்மன் தரப்பில், இலங்கையின் தலைமை நீதிபதியை நீக்குவதற்கான அரசின் நடவடிக்கை கைவிடப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்தியா, அமெரிக்கா, கனடா, ஜெர்மன் தரப்பில் கருத்துகளைத் தெரிவித்த போது இலங்கை தரப்பில் பதில் தர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதால் அனல் பறந்தது என்றே சொல்லலாம்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications