நாமக்கலில் பாய்லர் வெடித்து 2 பேர் பலி-4 பேர் 'சீரியஸ்'

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நாமக்கலில் உருக்கு ஆலையில் இருந்த பாய்லர் வெடித்து சிதறியது. இதில் உருகிய நிலையில் இருந்த இரும்பு தெறித்து 2 பேர் பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்த தொட்டியம் தோட்டத்தில் தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்கு ஆலை உள்ளது. இங்கு இரும்பு கழிவுகளை உருக்கி இரும்பு கம்பிகள் தயாரிக்கப்படுகிறது. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

நேற்று அதிகாலை 4 மணியளவில் பீகாரை சேர்ந்த வினோத்(45), ஒரிசாவை சேர்ந்த பரத்குமார்(47), நிரஞ்சன்(29), அமர்(27), சிதன்உமா(25), ஜனன்(23) ஆகிய 6 பேர் மட்டும் பணிக்கு வந்திருந்தனர். இவர்கள் ஆலையில் இருந்த பாய்லரில் இரும்பு துகள்களை போட்டு கொண்டிருந்தனர். பாய்லர் கொதித்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் காலை 8 மணி அளவில் திடீரென பாய்லர் வெடித்து சிதறியது. இதில் பாய்லரில் கொதித்து கொண்டிருந்த உருகிய நிலையில் இருந்த இரும்பு குழம்பு, பணியாளர்களின் மீது விழுந்தது.

இதில் உடல் முழுவதும் வெந்த வினோத், பரத்குமார் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்ற 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்களை உடனடியாக மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+