நாமக்கலில் பாய்லர் வெடித்து 2 பேர் பலி-4 பேர் 'சீரியஸ்'
நாமக்கல்: நாமக்கலில் உருக்கு ஆலையில் இருந்த பாய்லர் வெடித்து சிதறியது. இதில் உருகிய நிலையில் இருந்த இரும்பு தெறித்து 2 பேர் பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்த தொட்டியம் தோட்டத்தில் தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்கு ஆலை உள்ளது. இங்கு இரும்பு கழிவுகளை உருக்கி இரும்பு கம்பிகள் தயாரிக்கப்படுகிறது. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
நேற்று அதிகாலை 4 மணியளவில் பீகாரை சேர்ந்த வினோத்(45), ஒரிசாவை சேர்ந்த பரத்குமார்(47), நிரஞ்சன்(29), அமர்(27), சிதன்உமா(25), ஜனன்(23) ஆகிய 6 பேர் மட்டும் பணிக்கு வந்திருந்தனர். இவர்கள் ஆலையில் இருந்த பாய்லரில் இரும்பு துகள்களை போட்டு கொண்டிருந்தனர். பாய்லர் கொதித்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் காலை 8 மணி அளவில் திடீரென பாய்லர் வெடித்து சிதறியது. இதில் பாய்லரில் கொதித்து கொண்டிருந்த உருகிய நிலையில் இருந்த இரும்பு குழம்பு, பணியாளர்களின் மீது விழுந்தது.
இதில் உடல் முழுவதும் வெந்த வினோத், பரத்குமார் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்ற 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்களை உடனடியாக மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications