அரசு விழாவில் எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி புறக்கணிப்பு: கொந்தளித்த புதிய தமிழகம் தொண்டர்கள்
ஒட்டப்பிடாரம்: தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் அத்தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் கிருஷ்ணசாமி அழைக்கப்படாததைக் கண்டித்து புதிய தமிழகம் கட்சியினர் கொந்தளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட புதியம் புத்தூர் தொகுதியில் தமிழக அரசு சார்பில் மாணவர்களுக்கு சைக்கிள் மற்றும் இலவச லேப்டாப் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லப்பாண்டியன் கலந்து கொண்டார். ஆனால் ஒட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ.வான புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அழைக்கப்படவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த புதிய தமிழகம் கட்சியினர் அமைச்சர் செல்லப்பாண்டியனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விழா நிகழ்ச்சியிலிருந்தும் புதிய தமிழகம் கட்சியினர் வெளியேற அமைச்சர் செல்லப் பாண்டியனும் சிறிது நேரத்திலேயே விழாவை முடித்துவிட்டு கிளம்பினார்.












Click it and Unblock the Notifications