தேவர் குருபூஜைக்கு சென்று திரும்பியோர் மீது பெட்ரோல் குண்டுவீச்சு- 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மதுரை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையில் கலந்து கொண்டு திரும்பியோர் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதில் மாணவர் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் சிந்தாமணி அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 20 பேர் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது மதுரை சிந்தாமணி அருகே ஒரு கும்பல் இவர்களது வாகனத்தை வழிமறித்து அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகளை வீசியது. இதில் 20 பேரும் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் படுகாயமடைந்த 20 பேரில் மூவர் இன்று காலை உயிரிழந்தனர். உயிரிழந்தோரில் ஜெயபாண்டி என்பவர் கல்லூரி மாணவர்.
இச்சம்பவத்தால் தென்மாவட்டங்களில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.












Click it and Unblock the Notifications