கூடங்குளம் அணு உலையால் மன்னார் மீனவர்களுக்கு பாதிப்பு: இந்திய தூதரிடம் இலங்கை குழு மனு

Subscribe to Oneindia Tamil

Kudankulam Plant
கொழும்பு: தமிழகத்தில் கூடங்குளம் அணு உலையால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக இலங்கைக்கான இந்திய தூதரிடம் இலங்கை குழுவினர் மனு ஒன்றைக் கொடுத்துள்ளனர்.

இலங்கையின் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், மன்னார் ஆயரின் பிரதிநிதி ஜெயபாலன் குரூ, பத்திரிகையாளர் குசல் பெரேரா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் இன்று இலங்கைக்கான இந்திய தூதர் அசோக் காந்தாவிடம் கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மனுவைக் கொடுத்தனர்.

இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மனோ கணேசன், கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக 3 சந்தேகங்களை நாங்கள் இந்தியத் தூதரிடம் முன்வைத்தோம். கூடங்குளத்தில் விபத்து ஏற்பட்டால் அதை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் என்ன? அணுகழிவுகளை எப்படி இந்தியா அகற்றும்? கூடங்குளம் அணு உலையால் மன்னார் பகுதி மக்களுக்கு நெருக்கடி ஏற்பட்டால் அதற்கான ஏற்பாடுகள் என்ன? என்று கேட்டிருக்கிறோம்.

தமிழகத்தில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் இன்னமும் முடிவடையவில்லை. போராட்டக்காரர்களை மிகக் கடுமையாக ஒடுக்குவது கவலையளிக்கிறது. இந்த விஷயங்களை உள்ளடக்கி இந்திய பிரதமர் மன்மோகன்சிங், தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவினருக்கான மனுக்களை இந்தியத் தூதரிடம் கொடுத்திருக்கிறோம் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+