படபடப்பு- தலைவலி: திருச்சி அதிமுக எம்எல்ஏ மனோகரன் மருத்துவமனையில் அனுமதி
திருச்சி: திருச்சி அதிமுக எம்எல்ஏ மனோகரன், படபடப்பு மற்றும் தலைவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ மனோகரன்(50). இவர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளராகவும் செயலாற்றி வருகிறார். நேற்று கட்சி கூட்டங்களில் கலந்து கொண்ட மனோகரன், இன்று காலையில் தலைவலி மற்றும் படபடப்பு ஏற்படுவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து அவர் உடனடியாக திருச்சியில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் நடைபெற்ற பொது கூட்டங்களில் கலந்து கொண்ட மனோகரன், பள்ளி குழந்தைகளுக்கான இலவச கைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அடுத்தடுத்து பல பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதால், மனோகரனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.