இன்று அமெரிக்க அதிபர் தேர்தல்... வெல்லப் போவது யார்?

இப்போதைய அதிபர் ஒபாமாவும், அவரை எதிர்த்துப் போட்டியிடும் ராம்னியும் நேரடிப் போட்டியில் உள்ளனர். இவர்களில் ஒபாமாவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கூறப்பட்டாலும் கூட ராம்னியும் கடும் போட்டியைக் கொடுத்து வருவதால் வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் தேள்கொட்டினால் அம்பாசமுத்திரத்தில் நெறிகட்டும் என்று சொல்லும் அளவுக்கு, உலக நாடுகளை பாதிக்கும் சக்தி மிக்கது அமெரிக்க அதிபர் பதவி.
எந்த நாட்டில் தேர்தல் நடந்தாலும், அது உள்ளூர் சமாச்சாரமாகத்தான் தெரிகிறது. ஆனால் அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெல்வார்கள் என்பது உலகம் முழுக்க கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
இந்த தேர்தல் ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நவம்பர் மாதத்தின் முதலாவது திங்கட்கிழமைக்கு பிறகு வரும் முதலாவது செவ்வாய்க்கிழமையில் நடப்பது வழக்கம்.
தற்போது அதிபராக இருந்து வரும் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஒபாமாவின் பதவிக் காலம் அடுத்து ஆண்டு தொடக்கத்தில் முடிவடைவதால், புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் கவர்னர் மிட் ராம்னி நிறுத்தப்பட்டுள்ளார்.
இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். நேரடி தொலைக்காட்சி விவாதத்தின்போது, முதல் முறை ராம்னி கை ஓங்குவது போல தெரிந்தாலும், அடுத்தடுத்த விவாதங்களில் ஒபாமா அசத்தினார்.
அமெரிக்காவில் மொத்தம் உள்ள 50 மாநிலங்களில் ஒபாமாவுக்கு சில மாநிலங்களிலும், மிட் ராம்னிக்கு சில மாநிலங்களிலும் அதிக ஆதரவு உள்ளது. இதையெல்லாம் ஏற்கெனவே தமிழ்.ஒன்இந்தியாவின் சிறப்புக் கட்டுரைகளில் பார்த்திருப்பீர்கள்.
அமெரிக்காவில் மக்கள் தொகைக்கு ஏற்ப ஒவ்வொரு மாநிலத்திற்கென்றும் தனித்தனியாக தேர்தல் சபை வாக்குகள் உள்ளன. ஒரு மாநிலத்தில் பெரும்பான்மையான மக்கள் வாக்குகளை யார் பெறுகிறார்களோ, அவர்களுக்கே அந்த மாநிலத்தின் தேர்தல் சபை வாக்குகள் அனைத்தும் வழங்கப்படும்.
இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் தேர்தல் சபை உறுப்பினர்கள் பின்னர் கூடி அமெரிக்க ஜனாதிபதியை தேர்ந்து எடுப்பார்கள். யார் அதிக தேர்தல் சபை வாக்குகளை பெறுகிறாரோ, அவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார்.
மொத்தம் 538 தேர்தல் சபை வாக்குகள் உள்ளன அதாவது நம்ம எம்பிக்கள் மாதிரி. இதில் 270 தேர்தல் சபை வாக்குகளை பெறுபவர் அதிபர் ஆவார்.
இந்த நடைமுறை அனைத்தும் ஜனவரி முதல் வாரத்தில் முடிந்துவிடும். ஜனவரி 6-ம் தேதி யார் அதிபர் என்று முறைப்படி அறிவிக்கப்படும். ஜனவரி 20ம் தேதி புதிய அதிபர் பதவி ஏற்பார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications