வரத்து குறைவு: அரிசி விலை கடும் உயர்வு

நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் சாரல் பொய்த்துவிட்டதால் கார் நெல் சாகுபடி நடைபெறவில்லை. நெல் தட்டுப்பாடு காரணமாக பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகளில் அரவைக்கு நெல் கிடைக்கவி்ல்லை. மேலும் அறிவிக்கப்படாத 14 மணி நேரத்திற்கும் மேலான மின்வெட்டால் பாதிக்கும் மேற்பட்ட ஆலைகள் இயங்க முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன.
மாவட்ட பகுதிகளில் நெல் மகசூல் இல்லாததால் கோபிச்செட்டிபாளையம், தஞ்சாவூர், திருத்துறைப்பூண்டி மற்றும் ஆந்திராவில் இருந்து நெல் வரத்து இருந்தது. இந்நிலையில் நிலம் புயல் காரணமாக வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் வயல் பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து நெல் அறுவடை செய்ய முடியாமல் போனது. இதன் காரணமாக அங்கிருந்தும் நெல் வரத்து அடியோடு நின்றுவிட்டது. இதனால் நெல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
டீலக்ஸ் பொன்னி அரிசி குவிண்டால் ரூ.3200லிருந்து ரூ.3500 ஆகவும், செல்லப்பொன்னி ரூ.2800லிருந்து ரூ.3000 ஆகவும், அம்பை 16 ரகம் ரூ.2500லிருந்து ரூ.2700 ஆகவும் விலை அதிகரித்துள்ளது. தொடர் மின்தடை, நெல் வரத்து குறைவு ஆகியவற்றால் பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள அரிசி ஆலைகள் சரிவர இயங்கவில்லை. இதனால் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications