காங். அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது- தேர்தல் ஆணையம்! கோர்ட்டுப் போகிறேன் - சு.சுவாமி!
டெல்லி: பொது நிறுவனம் ஒன்றுக்கு கடன் கொடுத்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கொடுத்த மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது
காங்கிரஸ் மீதான புகார் என்ன?
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பொதுச்செயலர் ராகுல் காந்தியும் பங்குதாரர்களாக இருக்கும் நிறுவனம் யங் இண்டியன். இந்நிறுவனம் பொது நிறுவனமான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ1600 கோடி சொத்துகளை கையகப்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் அசோசியேட்டட் ஜர்னல் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ90 கோடி கடனாகக் கொடுத்திருக்கிறது.
வருமான வரிச்சட்டப்படி ஒரு அரசியல் கட்சி வர்த்தக ரீதியில் கடன் அளிக்கக் கூடாது என்பது விதிமுறை எனக் கூறி, காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தையே ரத்து செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் மனுக் கொடுத்திருந்தார் சுப்பிரமணியன் சுவாமி.
இந்த மனுவை இன்று தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. ஆனாலும் சுப்பிரமணியன் சுவாமி விட்டுவிடுவாரா என்ன? நீதிமன்றப் படிக்கட்டுகள் ஏறியாவது காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வைப்பேன் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியிருக்கிறார்.
இந்த சு.சுவாமி புயல் இப்போது ஓயப்போவதில்லை!












Click it and Unblock the Notifications