குஜராத் சட்டசபை தேர்தல்: மோடிக்கு நெருக்கமான அதிகாரிகள் டிரான்ஸ்பர்- தேர்தல் ஆணையம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: குஜராத் மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 5 ஐ.பி.எஸ். அதிகாரிகள், 4 மாவட்ட ஆட்சியரை தேர்தல் ஆணையம் அதிரடியாக இடம் மாற்றம் செய்திருக்கிறது. பனஸ்கந்தா மாவட்ட ஆட்சியராக தமிழ்நாட்டைச் சேர்ந்த தென்னரசனை தேர்தல் ஆணையம் நியமித்திருக்கிறது.

குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கின்றன.

குஜராத் தலைநகர் அகமதாபாத் கிரைம் பிரிவு அதிகாரிகளான ஏ.கே. சர்மா மற்றும் ஹிமான்ஷு சுக்லா ஆகியோர் மோடியின் வலதுகரமாக செயல்படுகிறவர்கள் என்று நீண்டகாலமாக காங்கிரஸ் கட்சி புகார் கூறி வருகிறது. காங்கிரஸ் தலைவர்களின் தொலைபேசிகளை ரகசியமாக டேப் செய்ததில் இவர்களுக்குப் பங்கிருப்பது என்பதும் குற்றச்சாட்டு. தற்போது இருவருமே மாற்றப்பட்டுள்ளனர். இதேபோல் ஜாம்நகர் எஸ்.பி. படேல், பதான் எஸ்.பி. பரதா, சூரத் காவல்துறை அதிகாரி சோலங்கி ஆகியோர் மீதும் தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் பறந்ததால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

5 ஆட்சியர்கள் மாற்றம்

இதேபோல் டஹோட், பனஸ்கந்தா, தபி, சபர்கந்தா ஆகிய மாவட்டங் ஆட்சியர்கள் மாற்றப்பட்டுள்ளனர். பனஸ்கந்தா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பனஸ்கந்தாவுக்கு தென்னரசன் என்ற தமிழ் ஐ.ஏ.எஸ். அதிகாரியை ஆட்சியராக தேர்தல் ஆணையம் நியமித்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+