சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் பதவி வடக்கு, தெற்கு என 2 ஆக பிரிப்பு
சென்னை: சென்னையில் இதுவரை இருந்து வந்த கூடுதல் போலீஸ் கமிஷனர் பதவி இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இனி வடக்கு மற்றும் தெற்கு என இரு கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் இருப்பார்கள்.
சென்னை மாநகரம் விரிவாக்கப்பட்டு காவல் எல்லையும் விரிவுபடுத்தப்பட்டது. அதாவது செங்கை கிழக்கு போலீஸ் மாவட்டம் சென்னை மாநகர காவல்துறையுடன் இணைக்கப்பட்டது. இதையடுத்து கூடுதலாக இணைந்த பகுதிகளைக் கவனிப்பதற்காக கூடுதல் போலீஸ் கமிஷனர் பதவி உருவாக்கப்பட்டது.
தற்போது இந்தப் பதவியை இரண்டாகப் பிரித்துள்ளனர். அதாவது வடக்குப் பகுதிக்கு ஒரு கூடுதல் போலீஸ் கமிஷனரும், தெற்குக்கு ஒரு கூடுதல் போலீஸ் கமிஷனரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி ஏற்கனவே கூடுதல் கமிஷனராக இருந்து வரும் தாமரைக்கண்ணன் இனி வடக்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனராக செயல்படுவார். அவரது பொறுப்பில், கிழக்கு, வடக்கு இணை ஆணையங்கள் வரும். மேலும் 6 துணை கமிஷனர் மாவட்டங்களும் இவரது கட்டுரப்பாட்டில் இருக்கும்.
சென்னை தெற்கு கூடுதல் கமிஷனராக ராஜேஷ் தாஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரை நேற்றுதான் தென் மண்டல ஐஜி பதவியிலிருந்து மாற்றினார்கள். இவரது கட்டுப்பாட்டின் கீழ் தெற்கு மற்றும் மேற்கு இணை ஆணையரகங்களும், புளியந்தோப்பு, அண்ணாநகர், அம்பத்தூர், பரங்கிமலை, தி.நகர், அடையாறு ஆகிய துணை ஆணையரகங்களும் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications