பணம் சம்பாதிக்கப் போகிறேன், யாரும் தேடாதீங்க: கடிதம் எழுதி வைத்துவிட்டு வாலிபர் மாயம்
ஈரோடு: ஈரோட்டில் கடன் தொல்லை தாங்க முடியாமல் வாலிபர் ஒருவர் தன்னை தேட வேண்டாம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமாகிவிட்டார்.
ஈரோடு மாவட்டம் கிருஷ்ணம்பாளைத்தில் உள்ள கக்கன் நகரைச் சேர்ந்தவர் மல்லிகார்ஜுனன்(35). அவர் ஊரைச் சுற்றி கடன் வாங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் தங்கள் பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டு வந்துள்ளனர். இதனால் அவர் கடன் தொல்லை தாங்க முடியாமல் இருந்து வந்துள்ளார்.
கடன் தொல்லை மேலும் அதிகரிக்கவே அவர் திடீர் என்று மாயமாகிவிட்டார். அவர் மாயமாகும் முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, கடன் தொல்லையால் அவதிப்படுகிறேன். பணம் சம்பாதிக்க செல்கிறேன் என்னை தேட வேண்டாம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து அவரது மனைவி ராஜேஸ்வரி கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரின்பேரில் போலீசார் மல்லிகார்ஜுனனை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications