எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட வயல்கள்... ஜெயந்தி நடராஜன் நேரில் ஆய்வு

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டனம்: நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் இந்திய இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் நிறுவனத்தின் எண்ணெய்க் குழாய்களில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட வயல்களை மத்திய சுற்றுச்சூழல்துறை இணை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் நேரில் பார்த்து ஆய்வு நடத்தினார்.

கீழ்வேளூர் பகுதியில் உள்ள வயல்கள் மற்றும் வாய்க்கால்களில் எண்ணெய் கலந்து பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. கிட்டத்தட்ட 20 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களும், வாய்க்கால்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.

இதையடுத்து இங்கு ஜெயந்தி நடராஜன் இன்று வருகை தந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கீழ்வேளூர் காருகாகுடி பகுதியில் உள்ள நிலங்களையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பிறகு ஓஎன்ஜிசி அதிகாரிகளையும் அவர் சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இது போன்ற பிரச்னை இனிவரும் காலங்களில் ஏற்படாமல் தடுக்க பெட்ரோலியத்துறை அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும். மேலும், இது போன்ற எண்ணெய்க் கசிவுகளால் நீர்நிலைகளும் சுற்றுச் சூழலும் அதன் காரணத்தால் மக்களும் பாதிக்கப்பட நேரிடுகிறது.

ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கும் பாதிப்புகளுக்கும் உரிய நிவாரணம் பெற்றுத் தர ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+