திருவிடைமருதூர், வேப்பனஹள்ளி திமுக வேட்பாளர்களின் வெற்றி செல்லும்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை: திருவிடைமருதூர் மற்றும் வேப்பனஹள்ளி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற திமுக வேட்பாளர்களின் வெற்றி செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திருவிடைமருதூர் மற்றும் வேப்பனஹள்ளி ஆகிய தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிட்ட கோவை செழியனும், செங்குட்டுவனும் வெற்றி பெற்றனர். இதையடுத்து செழியனின் வெற்றியை எதிர்த்து அதிமுகவைச் சேர்ந்த பாண்டிராஜன் மற்றும் செங்குட்டுவனின் வெற்றியை எதிர்த்து தேமுதிகவைச் சேர்ந்த கந்தனும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
அவர்கள் இருவரின் மனுக்களை விசாரித்த நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை அளித்தது.
அந்த தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பதாவது,
திருவிடைமருதூர் மற்றும் வேப்பனஹள்ளி தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் பெற்ற வெற்றி செல்லும் என்று தெரிவித்துள்ளார். மேலும் திமுக வேட்பாளர்களின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்களையும் அவர் தள்ளுபடி செய்தார்.












Click it and Unblock the Notifications