ஜெனிவா மாநாட்டில் மனித உரிமைகளுக்காக சர்வதேச நாடுகள் இலங்கைக்கு 210 பரிந்துரைகள்-100 நிராகரிப்பு
ஜெனிவா: ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆய்வுக் கூட்டத்தில் சர்வதேச நாடுகள் முன்வைத்த 210 பரிந்துரைகளில் 110 பரிந்துரைகளை மட்டும் ஏற்பதாகவும் 100 பரிந்துரைகளை நிராகரிப்பதாகவும் இலங்கை அரசு அறிவித்திருக்கிறது.
சுவிஸ் நாட்டின் ஜெனிவா நகரில் ஐ.நா. மனித உரிமைகள் ஆய்வுக் கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் பற்றி விவாதிக்கப்பட்டன.
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும், மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக நம்பத்தகுந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடாக இருந்தது. இதேபோல் ராணுவத்தினரின் எண்ணிக்கையை தமிழர் பகுதியில் இருந்து குறைக்கவும் இந்தியா வலியுறுத்தியது. அமெரிக்கா, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளும் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் பற்றி விமர்சித்திருந்தன.
இதற்கு இலங்கை அரசும் விளக்கம் கொடுத்தது. மாநாட்டின் கடைசி நாளான நேற்று இலங்கையில் மனித உரிமைகளை நிலைநாட்ட 99 நாடுகள் 210 பரிந்துரைகளை முன்வைத்தன. இதில் 110 பரிந்துரைகளை ஏற்பதாக இலங்கை அரசு அறிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications