ரிஷிவந்தியம் வெற்றியை எதிர்த்து வழக்கு: விஜயகாந்த் மனுவை தள்ளுபடி செய்த ஹைகோர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரிஷிவந்தியம் தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் விஜயகாந்த் தாக்கல் செய்த 2 மனுக்களில் ஒரு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ரிஷிவந்தியம் தொகுயில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெற்றி பெற்றதை எதிர்த்து ஜெயந்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், எனது வேட்பு மனுவை ரிஷிவந்தியம் தொகுதி தேர்தல் அதிகாரி நிராகரித்தது சட்ட விரோதம். எனவே அந்த தொகுதியில் விஜயகாந்த் வெற்றி பெற்றதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி வெங்கட்ராமன் முன்பு நடந்து வருகிறது. இன்றைய விசாரணையின் போது விஜயகாந்த் 2 மனுக்களை தாக்கல் செய்தார். காலதாமதமாக மனுதாக்கல் செய்ததை ஏற்க வேண்டும் என்றும், ரிஷிவந்தியம் தொகுதி தேர்தல் அதிகாரி மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நீக்க வேண்டும் என்றும் அவர் அந்த மனுக்களில் தெரிவித்திருந்தார்.

இதில் காலதாமதமாக மனுதாக்கல் செய்ததை ஏற்கக் கோரிய மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி மற்றொரு மனுவை தள்ளுபடி செய்து வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தார். விஜயகாந்துக்கு எதிராக மனுதாரர் ஜெயந்தி கூறியுள்ள குற்றச்சாட்டுகள் நாளை பதிவு செய்யப்படும் என்றும், அது குறித்து இரு தரப்பினரும் தங்கள் தரப்பு குற்றச்சாட்டுகளை வரையறுத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+