ரிஷிவந்தியம் வெற்றியை எதிர்த்து வழக்கு: விஜயகாந்த் மனுவை தள்ளுபடி செய்த ஹைகோர்ட்
சென்னை: ரிஷிவந்தியம் தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் விஜயகாந்த் தாக்கல் செய்த 2 மனுக்களில் ஒரு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ரிஷிவந்தியம் தொகுயில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெற்றி பெற்றதை எதிர்த்து ஜெயந்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், எனது வேட்பு மனுவை ரிஷிவந்தியம் தொகுதி தேர்தல் அதிகாரி நிராகரித்தது சட்ட விரோதம். எனவே அந்த தொகுதியில் விஜயகாந்த் வெற்றி பெற்றதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி வெங்கட்ராமன் முன்பு நடந்து வருகிறது. இன்றைய விசாரணையின் போது விஜயகாந்த் 2 மனுக்களை தாக்கல் செய்தார். காலதாமதமாக மனுதாக்கல் செய்ததை ஏற்க வேண்டும் என்றும், ரிஷிவந்தியம் தொகுதி தேர்தல் அதிகாரி மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நீக்க வேண்டும் என்றும் அவர் அந்த மனுக்களில் தெரிவித்திருந்தார்.
இதில் காலதாமதமாக மனுதாக்கல் செய்ததை ஏற்கக் கோரிய மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி மற்றொரு மனுவை தள்ளுபடி செய்து வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தார். விஜயகாந்துக்கு எதிராக மனுதாரர் ஜெயந்தி கூறியுள்ள குற்றச்சாட்டுகள் நாளை பதிவு செய்யப்படும் என்றும், அது குறித்து இரு தரப்பினரும் தங்கள் தரப்பு குற்றச்சாட்டுகளை வரையறுத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications