உ.பி.யில் பட்டாசு வெடி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உள்பட 8 பேர் பலி, 12 பேர் காயம்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த வீட்டில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உள்பட 8 பேர் உடல் கருகி பலியாகினர், 12 பேர் காயமடைந்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் அவுராயா மாவட்டத்தில் உள்ளது யாகூப்பூர் கிராமம். அங்குள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து வந்துள்ளனர். அங்கு தீபாவளிக்கு பட்டாசு தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை எதிர்பாராவிதமாக அந்த வீட்டில் உள்ள பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். மேலும் 12 படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் நிலைமை மோசமானவர்கள் கான்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காயமடைந்த 12 பேரில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
விபத்து நடந்த வீடு மோதிலால் மற்றும் ராம் நரைன் ஆகியோருக்கு சொந்தமானது.












Click it and Unblock the Notifications