சபரிமலையில் குவியும் ஐயப்ப பக்தர்கள்- நடை திறப்பு நேரம் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil

கார்த்திகை மாதம் தொடங்கியதால் பல்வேறு மாநிலத்தவரும் ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலை செல்வர். பல்வேறு மாநிலங்களிலும் தற்போது ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.
இருப்பினும் காலை 4 மணி முதல் பிற்பகல் 1.30 வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரையும் மட்டும் கோயில் நடை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. காலை 4.15 மணி முதல் மதியம் 12 மணி வரை நெய் அபிஷேகம் செய்ய அனுமதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது நிர்வாகம்.
பக்தர்கள் கூட்டம் கூடுதலாகும்போது கோயில் நடை திறப்பு நேரத்தை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications