இலங்கையிலிருந்து ஆஸி.க்கு செல்ல முயற்சித்த 104 பேர் கைது
Subscribe to Oneindia Tamil

இலங்கையின் சிலாபம் - துடுவாய கடற்பரப்பில் மீன்பிடி படகு ஒன்றை சந்தேகத்தின் பேரில் இலங்கை கடற்படை வழிமறித்தது. இதில் 98 தமிழர்கள், 6 சிங்களவர் இருந்தனர். அனைவரும் ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்ல முயன்றவர்கள் என தெரியவந்தது.
இதையடுத்து அனைவரையும் இலங்கை கடற்படை கைது செய்தது. கைது செய்யப்பட்டோர் யாழ்ப்பாணம், வவுனியா, புத்தளம், மட்டக்களப்பு, கொழும்பு, மன்னார், ஜா-எல, நீர்கொழும்பு, வத்தளை மற்றும் கல்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
இலங்கையில் இருந்து அகதிகளாக வெளிநாடுகளுக்கு தமிழர்கள் மட்டுமின்றி சிங்களவரும் தப்பிச் செல்வது தொடர் கதையாகி வருகிறது.












Click it and Unblock the Notifications