நைஸ் விரைவுச்சாலை ஊழல் வழக்கு: கர்நாடக முன்னாள் முதல்வர்கள் 3 பேர் மீது வழக்கு

பெங்களூர்-மைசூர் இடையே 100 கிமீ தூரத்திற்கு விரைவு நெடுஞ்சாலை
அமைக்க ஒப்பந்தப்புள்ளி பெற்ற நந்தி இன்ப்ராஸ்ட்ரக்சர் காரிடர் என்டர்பிரைசஸ்(நைஸ்) நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக பெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டி.ஜே. ஆபிரகாம் என்பவர் கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி லோக்ஆயுக்தா சிறப்பு நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார்.
அவரது புகாரின்பேரில் விரைவு நெடுஞ்சாலை அமைக்க நிலம் ஒதுக்கப்பட்டது குறித்து கர்நாடக முன்னாள் முதல்வர்கள் ஹெச்.டி. தேவே கௌடா, எதியூரப்பா மற்றும் எஸ்.எம். கிருஷ்ணா, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.வி. தேஷ்பாண்டே, டி.கே. சிவகுமார் மற்றும் நைஸ் விளம்பரதாரரான அசோக் கெனி உள்ளிட்டோர் பற்றி விசாரணை நடத்த கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி லோக்ஆயுக்தா நீதிமன்ற நீதிபதி என்.கே. சுதிந்திர ராவ் போலீசாருக்கு உத்தரவிட்டார். இது தவிர நைஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கிக்கு இடையேயான ஒப்பந்தம் குறித்தும் லோக்ஆயுக்தா போலீசார் விசாரணை நடத்தவிருக்கின்றனர்.
முன்னாள் முதல்வர்கள் தேவே கௌடா, எதியூரப்பா, எஸ்.எம். கிருஷ்ணா மற்றும் 276 பேர் மீது லோக்ஆயுக்தா போலீசார் நேற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.












Click it and Unblock the Notifications