கூடங்குளம் அணு உலைக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் போராட்டம்
யாழ்ப்பாணம்: தமிழ்நாட்டின் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுவரும் அணுஉலை மின் நிலையத்தை உடனடியாக மூட வலியுறுத்தியும், இந்தத் திட்டத்தை எதிர்த்து இடிந்தகரை மக்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் இலங்கையின் யாழ்ப்பாணம் நகரில் நேற்று பிரம்மாண்ட போராட்டம் நடைபெற்றது.
புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிசக் கட்சி என்ற கட்சியின் சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற மார்க்சியலெனினிசக் கட்சியின் தலைவர் சி.கா.செந்தில்வேல், கூடங்குளம் அணு உலையால் வரும் அணுக் கழிவுகளை, மன்னார் வளைகுடாவில் எண்ணெய் அகழ்வுக்காகத் தோண்டிய குழிகளில் போட்டு மூடிவிட திட்டமிட்டிருக்கின்றனர். இதனால் இலங்கையின் அதிகளவு மீன் வளத்தைக் கொண்டுள்ள மன்னார் கடல்படுக்கை பெரும் பாதிப்பைச் சந்திக்கும் என்றார்.
சுற்றுச் சூழல் ஆர்வலர் ஐங்கரநேசன் பேசுகையில், எமது போராட்டத்துக்குத் தமிழக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நாம், தமிழகத்தின் இடிந்தகரை மக்கள் நீண்ட நாள்களாகத் தொடர்ந்து நடத்திவரும் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று இதுவரை நினைக்காதது எவ்வளவு பெரிய துரோகம் என்று கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications