ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு: நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ் சாட்சியம்

Subscribe to Oneindia Tamil

Subbarao
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் ரிசர்வ் வங்கி ஆளுநரான சுப்பாராவ் இன்று சாட்சியமளித்தார்.

கடந்த 2007 -ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2008-ம் ஆண்டு வரை நிதித்துறை செயலாளராக இருந்தவர் சுப்பாராவ். முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சரான ஆ. ராசாவுக்கு எதிரான ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐயின் முக்கிய சாட்சியமாக கருதப்படுபவர் சுப்பாராவ்.

இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளித்த அவர், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைக்கு ரூ1600 கோடி கட்டணம் நிர்ணயித்ததை தொலைத்தொடர்புத் துறை செயலாளராக இருந்த மாத்தூருக்கு 2007 நவம்பர் 22-ந் தேதி அனுப்பிய கடிதத்தில் கேள்விக்குள்ளாக்கியிருந்தேன் என்று கூறியுள்ளார்.அதாவது 2001-ம் ஆண்டு விலையின் அடிப்படையில் 2007-ம் ஆண்டு விற்பனையை மேற்கொள்வது எப்படி சரியாகும் என்று கேள்வி எழுப்பினேன் என்றார் சுப்பாராவ். நாளையும் சுப்பாராவ் சாட்சியமளிக்க இருக்கிறார்.

ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்து வரும் இந்த நீதிமன்றம் கடந்த 11-ந் தேதி வரை முக்கிய குற்றவாளியான ஆ. ராசா, கனிமொழி உட்பட 77 பேரின் வாக்குமூலங்களைப் பதிவு செய்திருக்கிறது.

Reserve Bank of India (RBI) Governor D Subbarao on Monday deposed in a Delhi court as a prosecution witness in the 2G case, saying he had questioned in 2007 the spectrum fee of around Rs 1600 crore for pan India licence.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+