ஆந்திராவில் 'போலீஸ்' ஐயப்ப பக்தர்களுக்கு திடீர் கட்டுப்பாடுகள்- வெடிக்கிறது புதிய சர்ச்சை
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் சபரிமலை ஐயப்பனுக்கு விரதம் இருக்கும் போலீசார் தாடி வளர்க்க, மொட்டை அடிக்க, கருப்பு உடை அணிய புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆந்திராவில் டூட்டியில் இருக்கும் போலீசார் தாடி வளர்க்க கூடாது, மொட்டை அடிக்கக் கூடாது, ஷூ அணியாமல் இருக்கக் கூடாது, காக்கி உடைதான் அணிய வேண்டும் என்று போலீஸ் துறைக்கு மெமோ அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த மெமோ ஆந்திர போலீசாரிடமும் இந்து அமைப்புகளிடமும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் போலீஸ் தலைமையகமோ, சபரிமலை ஐயப்பனுக்கு விரதமே இருக்கக் கூடாது என்பது இந்த மெமோவின் நோக்கம் அல்ல..அப்படி விரதம் இருப்பவர்கள் முறையாக லீவ் வாங்கிவிட்டுப் போகலாம் என்பதற்கான மெமோ என்கிறது.
ஐயப்பனுக்கு 48 நாள் விரதம் இருக்க வேண்டும். அப்படியானால் கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் லீவு எடுப்பது என்பது சாத்தியமில்லை என்கிறது போலீஸ் தரப்பு.
இந்த மெமோவை 48 மணி நேரத்துக்குள் விலக்கிக் கொள்ளாவிட்டால் கடுமையான போராட்டத்தை சந்திக்க நேரிடும் என்று பாரதிய ஜனதா கட்சி எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
பழைய ஹைதராபாத்தில் சார்மினார் அருகே உள்ள பாக்கியலட்சுமி கோயிலை விரிவாக்கும் செய்யும் விவகாரம் கடுமையான பதற்றத்தை உருவாக்கியிருக்கும் நிலையில் தற்போதைய மெமோ எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதுபோல் என்கின்றனர் அரசியல் கட்சியினர்!












Click it and Unblock the Notifications