மின் வெட்டுப் பிரச்சனை பூதாகாரமாக உருவெடுத்துள்ளது: மு.க.அழகிரி

நிருபர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. மின் வெட்டுப் பிரச்சனை பெரிய அளவில் பூதாகாரமாக உருவெடுத்துள்ளது.
மத்திய மின் தொகுப்பில் இருந்து மின்சாரம் பெற முதல்வர் ஜெயலலிதா பிரதமரை நேரில் சென்று சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி முன்பே கூறியிருந்தார். ஆனால் அதை விட்டுவிட்டு மத்திய அரசைக் குறை கூறிக்கொண்டிருப்பது முறையல்ல.
மத்திய அரசின் முக்கியமான விவாதக் கூட்டங்களில் தமிழக அரசின் சார்பில் அதிகாரிகள் பங்கேற்பர். ஆனால் தற்போது அதிகாரிகள் இத்தகைய கூட்டங்களுக்குச் செல்ல அச்சப்படுகின்றனர். இத்தகைய கூட்டங்களுக்குச் செல்ல வேண்டுமானால் தமிழக அரசின் தலைமைச் செயலாளரின் அனுமதி பெற்ற பிறகே கலந்து கொள்ள வேண்டும் என்று முதல்வரின் பெயரில் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். இது எங்குமே நடக்காத ஒரு செயல்.
மதுரை மேலூர் பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவி வருவது குறித்து ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து உரிய நடவடிக்கை கோரி கலெக்டருக்கு கடிதம் அனுப்பினேன். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை என்றார் அழகிரி.












Click it and Unblock the Notifications