6-வது நாளாக பற்றி எரிகிறது பாலஸ்தீனம்- இஸ்ரேலின் கொடுந்தாக்குதல் நீடிப்பு- பலி-80; படுகாயம்- 700!!

நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று காசா நகரம் மீது மிக உக்கிரமான தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது. ஒரேநாளில் 31 பேர் பலியாகினர். இதில் 5 பச்சிளம் குழந்தைகள், 6 பெண்கள் அடக்கம்.
காசாவிலிருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நோக்கி வீசப்படும் ராக்கெட்டுகளின் தாக்குதலில் இதுவரை சுமார் 50 பேர் படுகாயமடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
மும்முனைப் போர்
இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையேயான தற்போதைய போர் களமானது மூன்று முனைகளில் நடைபெற்று வருகிறது. வான்வழித் தாக்குதல்கள் மூலம் உளவியல் ரீதியாக தாக்குவது, சமூக வலைதளங்கள் மூலமான கருத்து மோதல்கள் மற்றும் இணையதளங்களை முடக்கும் சைபர் யுத்தம்.
சைபர் யுத்தம்
கடந்த ஒருவார காலத்தில் மட்டும் இஸ்ரேலிய இணையதளங்களை முற்று முழுதாக முடக்கும் வகையில் மிகக் கடுமையான சைபர் யுத்தம் நடைபெற்று வருகிறது. சுமார் 44 மில்லியன் இணையதளங்கள் இதுவரையில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இஸ்ரேல் அரசின் அனைத்து இணையதளங்களும் குறிவைக்கப்பட்டிருக்கிறது. இணையதளங்கள் முடக்கபப்டுவதும் பின்னர் சீரமைக்கப்படுவதும் அடுத்து முடக்குவதும் என மிகப் பெரும் சைபர் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications