புதிய தலைமை செயலகத்தை நீதிமன்றமாக மாற்றக் கோரி டிராபிக் ராமசாமி வழக்கு!

திமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டு சிறிது காலம் இயங்கியது புதிய தலைமைச் செயலகம். அதிமுக அரசு பொறுப்பேற்றதும் தலைமைச் செயலகம் மீண்டும் கோட்டைக்கே மாறியது. புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றப் போவதாகவும் அரசு அறிவித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கின் இறுதி விசாரணை டிசம்பர் 3-ந் தேதி நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஒரு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்.
அதில், சென்னைய்ல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றங்களில் பல இடங்களில் பிரிந்து கிடக்கின்றன. இதனால் பொதுமக்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் சிரமம் இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிமன்றங்கள், சிறப்பு நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையோ 60 ஆக உயர்ந்துவிட்டது. அதனால் அவர்களுக்கான அறைகள், அலுவலக அறைகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.
இதேபோல் ஜார்ஜ்டவுன், எழும்பூர், சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றங்களில் அடிப்படை வசதிகள் இல்லை. இது தொடர்பாக நவம்பர் 1-ந் தேதி தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பினேன். சென்னையில் உள்ள மாஜிஸ்திரேட்டு நீதிமன்றங்களையும் கீழமை நீதிமன்றங்களையும் புதிய தலைமை செயலகத்துக்கு மாற்ற வேண்டும் என்று அதில் கோரியிருந்தேன்.
நான் அனுப்பிய மனுவை பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அதில் கோரியிருக்கிறார். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் இக்பால், சிவஞானம் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச், பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications