தூக்கில் தொங்குவதற்கு முதல் நாள் இரவில் பாட்டுப் பாடிய கசாப்.. சாவதற்கு முன்பு தக்காளி கேட்டான்!
புனே: தூக்கிலிடப்படுவதற்கு முதல் நாள் இரவில் அஜ்மல் கசாப் இயல்பாக இருந்துள்ளான். தனது அறையில் பாட்டுப் பாடியபடி இருந்தானாம். அதேசமயம், இரவெல்லாம் அவன் தூங்கவில்லையாம்.
166 உயிர்களைத் துடிக்கத் துடிக்கக் கொலை செய்த 10 பாகிஸ்தான் தீவிரவாதிகளில் உயிரோடு பிடிபட்டவன் கசாப் மட்டுமே. அவனுக்கு நேற்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இரவு முழுவதும் விழிப்பு.. வாய் நிறைய பாட்டு
செவ்வாய்க்கிழமையன்றுதான் உன்னை நாளை தூக்கில் போடப் போகிறோம் என்று கசாப்புக்குச் சொல்லியுள்ளனர். அதை இயல்பாக ஏற்றுக் கொண்ட கசாப், தனது அறையில் மிகவும் நார்மலாக இருந்துள்ளான். தூங்கவில்லை. பாட்டுக்களை முனுமுனுத்தபடி இருந்துள்ளான்.

செவ்வாய்க்கிழமை அதிகாலையில் சிறை மாற்றம்
முன்னதாக செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு ஆர்தர் சாலை சிறையிலிருந்து புனே எரவாடா சிறைக்கு கொண்டு வரப்பட்டான் கசாப். சிறப்பு கமாண்டோக்கள் புடை சூழ அவனைக் கொண்டு வந்துள்ளனர். அதற்கு முன்பே எரவாடா சிறையில் கசாப்பைத் தூக்கில் போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்து வைத்து விட்டனர் அதிகாரிகள்.

பதட்டமே இல்லை
தூக்கில் போடுவதற்கு முன்பு செய்யப்படும் மருத்துவப் பரிசோதனைகள் உள்ளிட்டவற்றின்போதும் நார்மலாக இருந்துள்ளான் கசாப். மேலும் டாக்டர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதட்டமே இல்லாமல் பதிலளித்துள்ளான்.

தக்காளி தர முடியுமா...?
தூக்கிலிடப்பட்ட நாளன்று அதிகாலையில் அவன் எழுந்தான். குளித்து முடித்த அவன், சாப்பிடுவதற்குத் தக்காளி வேண்டும் என்று கேட்டுள்ளான். இதையடுத்து ஒரு கூடை தக்காளியைக் கொண்டு வந்து கொடுத்தனர். ஆனால் 2 தக்காளியை மட்டும் எடுத்த கசாப், அதில் ஒன்றை மட்டும் சாப்பிட்டான்.

குடும்பத்தினரை சந்திக்க விருப்பம்
அவனிடம் கடைசி ஆசை குறித்து கேட்டபோது குடும்பத்தினரை சந்திக்க விரும்புவதாக கூறியுள்ளான். ஆனால் பாகிஸ்தான் தூதரகம் இதுதொடர்பாக பதிலே தரவில்லை என்று அதிகாரிகள் விளக்கிக் கூறினர்.

கடவுளிடம் மன்னிப்பு கேட்டான்
பின்னர் அவனை தூக்கு மேடைக்கு அழைத்துச் சென்றனர். கைகளை பின்புறமாக கட்டினர். கழுத்தில் கருப்புத் துணி மாட்டப்பட்டது. பிறகு கயிறு கழுத்தில் மாட்டப்பட்டது. அப்போது முனுமுனுத்தபடி பேச ஆரம்பித்தானாம் கசாப். அதில் தெளிவாக கேட்டது கடவுளிடம் மன்னிப்பு கோரி அவன் இறைஞ்சியதுதான்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications