கசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி: தூக்கிலிட ரூ.5,000

26/11 மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் நேற்று காலை 7.30 மணிக்கு புனேவில் உள்ள ஏர்வாடா சிறையில் தூக்கிலிடப்பட்டான். தூக்கிலிடப்பட்ட சில மணிநேரத்தில் அவனது உடல் சிறையிலேயே புதைக்கப்பட்டது. கசாபை நாங்கள் பணமே வாங்காமல் தூக்கிலிடுகிறோம் என்று பலர் விருப்பம் தெரிவித்தனர் என்று மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், முன்பெல்லாம் கைதியை தூக்கிலிடுபவருக்கு ரூ.10 கொடுக்கப்படும். தற்போது ரூ.5,000 கொடுக்கப்படுகிறது என்றார்.
கசாபை தூக்கிலிட விருப்பம் தெரிவித்தவர்களில் மீரட் மத்திய சிறையில் தூக்கிலிடும் பணியில் இருந்த மாமு சிங்கும் ஒருவர். ஆனால் அவர் கடந்த ஆண்டு மே மாதம் தனது ஆசை நிறைவேறாமலேயே இறந்துவி்ட்டார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கொலைளிகளை தூக்கிலிட்ட கல்லு சிங்கின் மகன் தான் மாமு சிங்.
கசாபை தூக்கிலிட்டது யார் என்ற விவரத்தை தெரிவிக்க போலீசார் தயாராக இல்லை. கடந்த 1995ம் ஆண்டுக்கு பிறகு நேற்று தான் மகாராஷ்டிராவில் ஒருவர் தூக்கிலிடப்பட்டுள்ளார். கடந்த 1995ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி அலிபாகைச் சேர்ந்த சுதாகர் ஜோஷி என்பவர் தான் கசாபுக்கு முன்பு ஏர்வாடா சிறையில் கடைசியாக தூக்கிலிடப்பட்டவர் ஆவார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மகாராஷ்டிராவில் இதுவரை மொத்தம் 17 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications