கசாப் தூக்கு தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு பெரிய நிம்மதி: அமிதாப் பச்சன்
Subscribe to Oneindia Tamil

கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டல் உள்பட பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 166 பேர் பலியாகினர். இந்த தாக்குதலை நடத்திய 10 பாகிஸ்தான் தீவிரவாதிகளில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசாப் நேற்று காலை 7.30 மணிக்கு புனேவில் உள்ள ஏர்வாடா சிறையில் தூக்கிலிடப்பட்டான்.
இந்நிலையில் இது குறித்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கூறுகையில்,
இந்த முடிவு(தூக்கு) நம் நாட்டின் சட்டங்கள் இன்னும் உள்ளன என்பதை நிரூபித்துள்ளது. ஆனால் பலர் கொல்லப்பட்டது வருத்தமான விஷயமாகும். அவர்களின் குடும்பத்தாருக்கு இந்த முடிவு ஆறுதலாக இருக்கும். இது நம் அனைவருக்குமே பெரிய நிம்மதியை அளித்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications