மாணவனை சிறுநீர் குடிக்க வைத்த ஆசிரியர்: விசாரணைக்கு உத்தரவு
கோதாவரி: ஆந்திராவில் பள்ளி மாணவனை சிறுநீர் குடிக்கவைத்த ஆசிரியர் மீது பள்ளிக்கல்வித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
மாணவனை சிறுநீர் குடிக்கச் சொன்ன ஆசிரியையின் பெயர் கவுரி. இவர் கிழக்கு கோதாவரி மாவட்டம் அனன்பர்த்தியில் உள்ள சத்யபாமா ஆங்கிலப் பள்ளியில் எல்.கே.ஜி வகுப்பிற்கு பாடம் நடத்தி வருகிறார்.
புதன்கிழமையன்று 4 வயது மாணவன் ஒருவன் அவசரமாக சிறுநீர் வருவதாக கூறி வெளியே செல்ல கவுரியிடம் அனுமதி கேட்டுள்ளான். இதற்கு மறுத்த ஆசிரியை, பிளாஸ்டிக் பாட்டிலில் சிறுநீரை பிடித்து குடிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுவன் பள்ளியில் நடந்த விவகாரம் குறித்து தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளான். இதனையடுத்து மாணவனின் பெற்றோர்கள் அனன்பர்த்தி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
வழக்குப் பதிவு செய்த போலீசார் கிழக்கு கோதாவரி மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதனையடுத்து புகாரின் அடிப்படியில் கிழக்கு கோதாவரி மாவட்ட கல்வி அதிகாரி, அனன்பர்த்தி கார்பரேட் பள்ளியில் விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும், குறிப்பிட்ட ஆசிரியர் குறித்த விசாரணை அறிக்கை அளிக்கவும் உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து ஆசிரியையிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications