For Daily Alerts
Just In
எதிர்பார்த்த புயல் முழுவதும் வலுவிழக்கிறது... மழைக்கு வாய்ப்பு
சென்னை: சென்னைக்கு அருகே வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் முழுமையாக வலுவிழந்து வருகிறது. இதனால் தமிழகக் கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வானிலை மைய அதிகாரி, வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த மண்டலம் வலுவிழுந்து நகர்வதால் கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்யும். தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 48 மணி நேரத்துக்குள் மேலும் வலுவிழப்பதால் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார்.
சென்னை நகரில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
Comments
English summary
The deep depression over the bay has weakened into a well marked low pressure area and it was expected to weaken further during the next 48 hours..
Story first published: Thursday, November 22, 2012, 15:09 [IST]