For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜீவ் காந்தி கொலையாளிகளையும் உடனே தூக்கில் போட வேண்டும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

By Siva
Google Oneindia Tamil News

EVKS Elangovan
ஈரோடு: ராஜீவ் காந்தி கொலையாளிகளை உடனே தூக்கலிட மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கோபியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

26/11 மும்பை தாக்குதல் தீவிரவாதி கசாபை தூக்கிலிட்டதை நாட்டு மக்கள் இனிப்பு வழங்கி கொண்டுகின்றனர். அதனால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையாளிகள் மற்றும் நாடாளுமன்றத்தை தாக்கிய தீவிரவாதிகளையும் உடனே தூக்கிலிட மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பவர்களை நாடு கடத்த வேண்டும். தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வரும் வைகோ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வைகோ கூறுவது அபத்தமானது. தீவிரவாதத்திற்கு கடுமையான தண்டனை இருக்க வேண்டும்.

2 மணிநேர மின்வெட்டு இருந்ததால் திமுக ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்தனர். ஆனால் தற்போது அதிமுக ஆட்சியிலோ 20 மணிநேரம் மின்வெட்டு உள்ளது. அதனால் ஜெயலலிதா மின்வெட்டு குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதுவதை நிறுத்திவிட்டு மின்வெட்டை சரி செய்யும் வழிகள் குறித்து யோசிக்க வேண்டும். பிரதமருக்கு கடிதம் எழுதுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டால் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்றார்.

English summary
Former central minister EVKS Elangovan wants centre to take immediate action to hang former PM Rajiv Gandhi's killers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X