ராஜீவ் காந்தி கொலையாளிகளையும் உடனே தூக்கில் போட வேண்டும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

இது குறித்து அவர் கோபியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
26/11 மும்பை தாக்குதல் தீவிரவாதி கசாபை தூக்கிலிட்டதை நாட்டு மக்கள் இனிப்பு வழங்கி கொண்டுகின்றனர். அதனால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையாளிகள் மற்றும் நாடாளுமன்றத்தை தாக்கிய தீவிரவாதிகளையும் உடனே தூக்கிலிட மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பவர்களை நாடு கடத்த வேண்டும். தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வரும் வைகோ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வைகோ கூறுவது அபத்தமானது. தீவிரவாதத்திற்கு கடுமையான தண்டனை இருக்க வேண்டும்.
2 மணிநேர மின்வெட்டு இருந்ததால் திமுக ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்தனர். ஆனால் தற்போது அதிமுக ஆட்சியிலோ 20 மணிநேரம் மின்வெட்டு உள்ளது. அதனால் ஜெயலலிதா மின்வெட்டு குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதுவதை நிறுத்திவிட்டு மின்வெட்டை சரி செய்யும் வழிகள் குறித்து யோசிக்க வேண்டும். பிரதமருக்கு கடிதம் எழுதுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டால் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்றார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications