சி.ஏ.ஜி. மீதான ஆர்.பி.சிங். புகார்: பார்லி.யில் விவாதம் நடத்த கோரி தீர்மானம் கொண்டு வருகிறது திமுக
சென்னை: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான கணக்கு தணிக்கை அறிக்கை மோசடியானது என்று அத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆர்.பி.சிங். கூறியிருக்கும் புகார் குறித்து விவாதம் நடத்த நாடாளுமன்றத்தில் திமுக தீர்மானம் கொண்டுவர இருக்கிறது.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்ததால் ரூ1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியது என்பது கணக்கு தணிக்கைத் துறையின் அறிக்கையின் குற்றச்சாட்டு. இது நாட்டில் பெரும் புயலை எழுப்பியது. இப்புயலில் திமுகவின் அமைச்சராக இருந்த ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் பதவி இழக்க நேரிட்டது. ஆ.ராசா, ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழியும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த புகாரால் தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தோல்வியையும் சந்திக்க நேரிட்டது. இது தொடர்பான வழக்கு இன்னமும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தணிக்கைத் துறை தலைவர் அலுவலகத்தில் தொலைத்தொடர்பு துறை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஆர்.பி.சிங் அதிரடியான உண்மைகளை அம்பலப்படுத்தினார். இது மீண்டும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ரூ1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது என்ற அறிக்கையில் தம்மை கட்டாயப்படுத்தி கையெழுத்து பெற்றனர் என்றும் இதில் பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு தலைவரான முரளி மனோகர் ஜோஷிக்கும் தொடர்பிருப்பதாகவும் கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் பாஜகவும் காங்கிரஸும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல் சென்னை வர உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்துக்கு மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் அது தொடர்பாகவே கபில்சிபல், கருணாநிதியை சந்திக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால் 2ஜி விவகாரத்தில் பெரும் இழப்புகளை சந்தித்திருக்கும் திமுக மூலம், ஆர்.பி.சிங். புகார் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த மத்திய அரசு விரும்புவதாக தெரிகிறது. இதன் காரணமாகத்தான் கபில்சிபலை சென்னைக்கு அனுப்ப இருப்பதாகக் கூறப்படுகிறது.
2ஜியில் தீக்குளித்த திமுக சாபவிமோசனம் பெறுகிறதோ?
-
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
நம்மகிட்ட என்ன இல்லை.. பாமக தொடங்கி 37 வருஷமாச்சு.. ஆனால்.. குமுறி தள்ளிய அன்புமணி -
சபரீசன் கையில் விரைவில் திமுக.. அப்படியே ஆந்திரா ஸ்டைல்.. அணுகுண்டை வீசிய அஇஅதிமுக உதயகுமார் -
Election Exclusive: இன்னும் என்ன பண்றீங்க..கோபத்தில் கண் சிவந்த ஸ்டாலின்! இன்னைக்குள்ள முடிங்க.. சுறுசுறுப்பான சீனியர்ஸ் -
7 கேட்ட மதிமுக.. 5க்கு குறைத்த திமுக.. தனிச்சின்னமும் கிடையாது.. வைகோவிடம் நேரடியாக சொன்ன ஸ்டாலின்! -
18-ஆ? 25-ஆ காங்கிரஸுக்கு? அப்ப அதிமுக 210, திமுக 200 சீட்? சென்னை டூ கன்னியாகுமரி வரை திடீர் சேஞ்ச்? -
வருகிறார் மாஸ்டர்மைண்ட்.. டெல்லி களமிறக்கும் ஐபிஎஸ்.. சரியாக தமிழக தேர்தல் நேரத்தில் பயங்கர பிளான்! -
Velmurugan's TVK: எதே! 10 சீட்டா? வேல்முருகனின் "பிளானால்" அதிர்ந்த திமுக! கடைசியில் சொன்னது என்ன? -
ரஞ்சனா நாச்சியார் ஒயிட் பேப்பர் காட்டி விஜய்யை அலற விட்டாரே? ராமநாதபுரம் திமுகவுக்கு அதிர்ஷ்டம்தான் -
மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு.. கடந்த தேர்தலை விட குறைக்கப்பட்டது ஏன்? பின்னணியில் துரை வைகோ! -
காமராஜர் ஆட்சிக்கு வேட்டு.. இந்திரா ஆட்சிக்கு ஓட்டு.. திமுக ஆடிய டபுள் கேம்! -
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி!












Click it and Unblock the Notifications