டெல்லியில் ஈழம் தொடர்பான வைகோவின் குறுந்தகடு, இந்தி பதிப்பு புத்தகம் இன்று வெளியீடு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மதிமுக பொதுச் செயலர் வைகோ தயாரிப்பில் உருவான "ஈழத்தில் இனக் கொலை; இதயத்தில் ரத்தம்' என்ற தலைப்பிலான விடியோ குறுந்தகடு, புத்தகம் ஆகியவற்றின் ஹிந்தி பதிப்பு இன்று வெளியிடப்படுகிறது.
டெல்லி லோதி சாலையில் உள்ள இந்திய இஸ்லாமிய கலாசார மையத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான ராம் ஜெத்மலானி தலைமை வகிக்கிறார்.
புத்தகத்தை டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜேந்திர சச்சார் வெளியிட மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான குல்தீப் நய்யார் பெற்றுக் கொள்கிறார். இந்நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மதிமுக எம்.பி. அ. கணேசமூர்த்தி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications