அகல ரயில் பாதைக்காக புனலூர் 13 தூண் பாலத்தை அகற்ற கடும் எதிர்ப்பு
செங்கோட்டை: செங்கோட்டை-புனலூர் இடையே நடைபெறும் அகல ரயில் பாதை பணிகளுக்காக நூற்றாண்டு பழமையான 13 தூண் பாலத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
தென்னக ரயில்வேயில் இயற்கை எழில் நிறைந்த ரயில் பாதைகளில் செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதை பிரதானமானது. சிறியதும், நீ்ண்டதுமான குகைகள், ராட்சத உயரம் கொண்ட பாலங்கள் ஆகியவை இந்த வழித்தடத்தில் உள்ளன. இதில் கொல்லம் முதல் புனலுர் வரையிலான மீட்டர்கேஜ் பாதையை அகல பாதையாக மாற்றும் பணி முடிவடைந்து விட்டது. தற்போது புனலூர் முதல் செங்கோட்டை வரை அகல பாதையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.
கொல்லம்-திருமங்கலம் தேசியநெடுஞ்சாலைக்கு இணையாக கழுதுருட்டிக்கும், தென்மலைக்கும் இடையில் அமைந்துள்ள 13 தூண் வளைவுகளை கொண்டு 108 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட உயரமான ரயில்வே பாலத்தையும் அகற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒருபகுதியாக நேற்று பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications