இறுதிப் போரில் இலங்கைக்கு இந்தியா செய்த உதவிகள் என்ன?: விசாரணைக் கமிஷன் கோரும் வைகோ

வைகோவின் "ஈழத்தில் இனக்கொலை- இதயத்தில் ரத்தம்" என்ற நூலின் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பதிப்புகளுடன் இலங்கை போர் தொடர்பான சிடி ஆகியவற்றை வெளியிடும் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான ராம்ஜெத்மலானி தலைமை வகித்தார்.
"ஈழத்தில் இனக்கொலை; இதயத்தில் ரத்தம்' நூலை டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜேந்திர சச்சார் வெளியிட மூத்த எழுத்தாளர் குல்தீப் நய்யார் பெற்றுக் கொண்டார்.
விசாரணைக் கமிஷன்- வைகோ
இந்நிகழ்ச்சியில் வைகோ பேசுகையில், 2009-ம் ஆண்டு போரில் இலங்கைக்கு ரேடார் கருவிகள், ராணுவ உதவி உள்ளிட்டவற்றை இந்திய அரசு வழங்கியது. இது நிரூபிக்கப்பட்ட உண்மைகள். இதை இலங்கை அரசும் தெரிவித்திருக்கிறது. போருக்குப் பிறகு தமிழர் பகுதிகளில் சிங்களர்கள் பெருமளவில் குடியேற்றப்பட்டு வருகின்றனர்.
இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழர்களின் நியாயமான கோரிக்கையான தனி அரசாங்கத்துடன் கூடிய தேசம் அமைக்க வேண்டும். இந்த பொது வாக்கெடுப்பை சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் நடத்த வேண்டும். போரின் போது இலங்கை ராணுவத்துக்கு இந்திய அரசு வழங்கிய உதவிகள் தொடர்பாக இந்தியாவில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும என்றார் அவர்,












Click it and Unblock the Notifications