திருச்சி சிறையில் மோதல்- 3 கைதிகளின் மண்டையை உடைத்த வார்டன்கள்
Subscribe to Oneindia Tamil

மோதலின் பின்னணி
தமிழக சிறைச்சாலைகளில் அடிக்கடி அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு செல்போன், பணம், சிம்கார்டு போன்றவைகள் பறிமுதல் செய்யப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் திருச்சி சிறையில் இன்று உணவுக்குள் செல்போன் பதுக்கி வைத்திருப்பதாக வார்டன்களுக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து சந்தேகத்துக்குரிய 3 விசாரணைக் கைதிகளின் உணவை வார்டன்கள் சோதித்துப் பார்த்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கைதிகளுக்கும் வார்டன்களுக்கும் இடையே மோதல் நிகழ்ந்தது. இம்மோதலில் 3 விசாரணைக் கைதிகளின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வார்டன்களின் இந்த தாக்குதலைக் கண்டித்து திருச்சி சிறையில் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications