ஜெகன் விடுதலைக்காக காளஹஸ்தியில் நடிகை ரோஜா சிறப்பு பூஜை

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பிரச்சார பீரங்கியாக இருப்பவர் நடிகை ரோஜா. பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறையில் இருக்கும் அக்கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் விடுதலைக்காக சிறப்பு பூஜை செய்வதற்காக ரோஜா தனது குடும்பத்தினருடன் நேற்று காளஹஸ்தி கோவிலுக்கு வந்தார்.
அங்குள்ள வாயுலிங்கேஸ்வரர் சுவாமிக்கு ருத்ர அபிஷேகம் நடத்தினார். பின்னர் ராகுகேது பரிகார யாக பூஜையில் பங்கேற்றார். காலையில் இருந்து மதியம் வரை கோவிலில் தங்கி இருந்தார். ரோஜாவுக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த பரிகார பூஜை குறித்து ரோஜா கூறுகையில்,
ராஜசேகர் ரெட்டியின் குடும்பத்தினர் மக்களுக்கு நல்லது செய்வதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை. அப்படி இருக்க ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராஜசேகர் ரெட்டியின் மறைவுக்கு பிறகு அவரது குடும்பத்தினர் பல தொல்லை களுக்கும், கஷ்டங்களுக்கும் ஆளாகி உள்ளனர்.
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி மலரவும், ஜெகன் சிறையில் இருந்து விடுதலை ஆக வேண்டியும் காளஹஸ்தி கோவிலில் சிறப்பு பூஜை செய்தேன் என்றார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications