யாழ். பல்கலை. மாணவர்கள் மீது தாக்குதல்- பேச்சுரிமைக்கான அச்சுறுத்தல்: அமெரிக்கா கண்டனம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வு தொடர்பாக மாணவர்கள் மீது போலீசும் ராணுவமும் இணைந்து தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தவறான செயல். அமைதியான முறையில் நடைபெறும் போராட்டங்களை ஒடுக்கக் கூடாது. பேச்சுரிமைக்கு இலங்கையில் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் நவம்பர் 28-ல் செய்தியாளர் ஒருவரும் கூட தாக்கப்பட்டுள்ளார். செய்தியாளர்கள் மீதான அரசு அதிகாரிகளின் அடக்குமுறை பத்திரிகை சுதந்திரத்தைப் பாதிக்கும்'' என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

மாவீரர் நாளை முன்னிட்டு யாழ். பல்கலைக் கழக மாணவிகள் விடுதியில் ராணுவத்தினர் சோதனை மேற்கொண்டதே பிரச்சனைக்கு காரணமாகும். மாவீரர் நாளுக்கு மறுநாள், சோதனை நடவடிக்கையைக் கண்டித்து போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசாரும்- ராணுவத்தினரும் இணைந்து கொடூரமாக தாக்கியனர். இந்தப் போராட்டத்தின் போது செய்தியாளர்களும் தாக்கப்பட்டனர். மேலும் உதயன் நாளிதழின் ஆசிரியரும் தாக்குதலுக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+