நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் திமுக... டிச. 15ல் ஸ்டாலின் தலைமையில் முக்கிய கூட்டம்

தேர்தல் உத்திகள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஸ்டாலின் பல்வேறு அறிவுரைகளையும், யோசனைகளையும் தெரிவிக்கவுள்ளாராம்.
நேற்று திருச்சி வந்த ஸ்டாலின் கூட்டம் நடக்கவுள்ள இடத்தைப் பார்வையிட்டார். மேலும் ஏற்பாடுகள் குறித்தும் அவர் நிர்வாகிகளுடன் விவாதித்தார். காஜாமலையில் நடைபெறவுள்ள இந்த கூட்டம் திமுகவினரிடையே பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளிலும் ஸ்டாலின் தலைமையில் தொடர் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
டிசம்பர் 16ம் தேதி கரூர், பெரம்பலூரில் ஸ்டாலின் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெறவுள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலின்போது திருச்சியை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுத்தது திமுக. கரூர், பெரம்பலூரில் தான் போட்டியிட்டது. இதில் திருச்சி, கரூரை அதிமுக கைப்பற்றியது. பெரம்பலூரில் திமுக வென்றது.
இந்த முறை திருச்சியில் திமுகவே போட்டியிட வேண்டும் என்று திமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர். எனவே திருச்சி ஆலோசனைக் கூட்டத்தில் இதை அவர்கள் ஸ்டாலினிடம் வலியுறுத்தவுள்ளனர்.
இக்கூட்டத்தில் கூட்டணி அமைப்பது தொடர்பாகவும் கட்சியினரின் கருத்துக்களை ஸ்டாலின் கேட்பார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications