தமிழகத்தில் இருண்ட 'அம்மா ஆசை' (அமாவாசை) ஆட்சி நடக்கிறது: முக ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil

இது குறித்து அவர் திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கர்நாடகத்திடம் இருந்து தமிழகத்திற்கு சேர வேண்டிய காவிரி நீரை பெற்றுத் தருமாறு திமுக மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தும். கர்நாடகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க விடாமல் செய்துவிட்டனர்.
அதே போன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றார்.
டெல்டா மாவட்டங்களில் சம்பா, குறுவை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து கேட்டதற்கு அவர் கூறுகையில், தமிழகத்தில் இருண்ட அம்மா ஆசை(அம்மாவாசை) ஆட்சி நடைபெற்று வருகிறது என்றார்.
தொடர்ந்து மின்வெட்டு குறித்து கேட்டதற்கு, தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி இருண்ட ஆட்சியாக உள்ளது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications