போப் பெனிடிக்ட் ட்விட்டரில் இணைகிறார்!!

சமூக வலைதான டுவிட்டரில் உலகில் உள்ள பிரபலங்கள் அனைவரும் இணைந்து, தங்கள் வாழ்வின் அன்றாட நிகழ்வுகளை பறிமாறிக் கொள்கின்றனர். அவர்கள் வெளியிடும் செய்தியை ஆதரித்தும், எதிர்த்தும், இந்த வலைத் தளத்தின் வாசகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
20 கோடிக்கும் அதிகமான ஆதரவாளர்களை பெற்றிருக்கும் டுவிட்டரில், தினந்தோறும் 11 கோடி பேர் தங்களின் கருத்துகளை பதிவு செய்கின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிபரம். இந்நிலையில் உலகெங்கும் வாழும் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவரான 16-ம் போப் பெனிடிக்ட் டுவிட்டரில் இணைய உள்ளதாக வாடிகன் அரண்மனை செய்தி வெளியிட்டுள்ளது.
டுவிட்டர் நிறுவன பிரதிநிதிகள், வாடிகன் அரண்மனை ஊழியர்கள் முன்னிலையில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டனர். டிசம்பர் 12ம் தேதி 16ம் போப் பெனிடிக் தனது முதல் பதிவை வெளியிடுகிறார். இது ஸ்பானிஸ், ஆங்கிலம், போர்ச்கீஸ், ஜெர்மன், அராபிக் மற்றும் ப்ரெஞ்ச் மொழிகளில் இருக்கும். மதம் தொடர்பான கருத்துக்களை உடனுக்குடன் தெரிவிக்கவே டுவிட்டரில் போப் இணைகிறார் என்கின்றனர் வாடிகன் அரண்மனை அதிகாரிகள்.
வாடிகன் அரண்மணைக்கு ஏற்கனவே டுவிட்டரில் ஒரு கணக்கு உள்ளது. எனினும், போப் பெயரால் டுவிட்டரில் தனி கணக்கு தற்போதுதான் தொடங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications