தனியாரில் கூடுதல் சம்பளம்: டி.ஆர்.டி.ஓவில் இருந்து 700 விஞ்ஞானிகள் ராஜினாமா…!

மாநிலங்களவையில் பல்வேறு கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதில் அளித்துள்ள ஏ.கே.அந்தோனி, ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்திலிருந்து (டிஆர்டிஓ) இந்த ஆண்டு மட்டும் இதுவரை 50 விஞ்ஞானிகள் விலகி உள்ளனர் என்று தெரிவித்துள்ளார். தனிப்பட்ட அல்லது குடும்ப காரணங்களுக்காக பணியிலிருந்து விலகுவதாக அவர்கள் கூறியுள்ளனர். எனினும், தனியார் நிறுவனங்களில் கூடுதல் சம்பளம் மற்றும் சலுகைகளுடன் வாய்ப்புகள் பெருகி வருவதே இதற்கு முக்கியக் காரணம். கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2011 வரை மட்டும் டிஆர்டிஓ-விலிருந்து 637 விஞ்ஞானிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்.
இலகு ரக ஹெலிகாப்டர் ஆர்டர் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்துள்ள அமைச்சர், அந்த திட்டம் ஒத்தி வைக்கப்படவில்லை என்றும், அது தொடர்பான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பதில் அளித்துள்ளார்.
மற்றொரு கேள்விக்கு பதில் அளித்துள்ள அந்தோனி, இந்திய விமானப் படைக்குத் தேவையான 15 கனரக ஹெலிகாப்டர்களை கொள்முதல் செய்ய அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தை தேர்வு செய்துள்ளனர். பரிசோதனையின்போது, நமது விமானப் படைக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் இந்த ஹெலிகாப்டரில் உள்ளதால், அதை வாங்க முடிவு செய்யப்பட்டது என்றார்.












Click it and Unblock the Notifications