உடல் உறுப்புகளை தானம் செய்த பிரியங்கா காந்தி, பிருந்தா காரத்

டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனை உடல் உறுப்பு தான முகாமை நேற்று நடத்தியது. சுமார் 500 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பிருந்தா காரத் தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக உறுதிமொழி எடுத்தார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி வேறு ஒரு அவசர வேளை இருந்ததால் நிகழ்ச்சிக்கு வரவில்லை. ஆனால் அவர் எழுத்து மூலம் அனுப்பிய தகவலை மருத்துவமனை அதிகாரிகள் வாசித்தனர். அதில், அவர் தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக உறுதியளித்துள்ளார்.
இந்தியாவில் கோடிக்கணக்கில் மக்கள் இருந்தும் பெரும்பாலானோர் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வருவதில்லை என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். மூளைச் சாவு அடைபவர்களில் சிலரின் உடல் உறுப்புகள் தானமாக கொடுக்கப்பட்டாலே இந்தியாவில் உறுப்பு மாற்றும் அறுவை சிகிச்சைக்கு பேருதவியாக இருக்கும் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications